Sunday, December 22, 2013

கேள்வி - பதில் - பிடித்தமானவை

பிரகாஷ் ராஜ் பதில்கள் - ஆனந்த விகடனில் படித்தது  - 25/9/2013
  • சந்தான முருகேசன், போடி 
  • நீங்க நல்லவரா... கெட்டவரா...? 

    • உங்க கேள்வி, மகாபாரத காலத்துக் கேள்வி. துரியோதனனையும் தருமனையும், அவங்க கண்லபடுறவங்கள்ல எத்தனை பேர் நல்லவங்க,   எத்தனை பேர் கெட்டவங்கனு ஒரு சர்வே எடுத்துட்டு வரச் சொன்னங்களாம். துரியோதனன் கண்ல மாட்டின எல்லார்கிட்டயும் ஒரு கெட்ட விஷயமாவது இருந்துச்சாம். நான்  பார்த்ததுல ஒருத்தன் கூட நல்லவன் இல்லை' னு சொல்லிட்டான்  துரியோதனன். தர்மன்  கண்ல பட்ட எல்லார்கிட்டயும் ஒரு நல்ல குணமாவது இருந்திருக்கு. அதனால  'நான்   கெட்டவங்களையே பார்க்களைன்னு சொன்னாராம் தர்மன். நிறையும் குறையும் தான் மனிதர்களோட இயல்பு. அது தான் அழகு. நான் மட்டுமில்லை.  நீங்க உட்பட எல்லோருக்குள்ளையும் நல்லவனும் இருக்கான்; கெட்டவனும் இருக்கான்.